Tuesday, December 8, 2009

Selfish politicians

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த


நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு


கோடியென் றாலது பெரிதாமோ ?


அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்

ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்

நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு

நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்


சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே

கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்

தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்

சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்

ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்

அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர்


எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்

கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்

காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்

நண்ணிய பெருங்கலைகள் - பத்து

நாலாயிரங் கோடி நயந்து நின்ற

புண்ணிய நாட்டினிலே - இவர்

பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

- பாரதி

No comments:

Post a Comment